
தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்தின் போது பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆளுநரை காட்டமாக விமர்சித்தார். அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பாக இருப்பவர் இந்திய குடிமகனாக இருப்பதற்கு தகுதியற்றவர். உங்களுக்கு ஒரு கட்சியின் கொள்கை இருந்தால் ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள். முன்பு இருந்த ஸ்டாலினுக்கும் இப்போது இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர் தற்போது பாதி கலைஞர், பாதி அண்ணா ஆகிவிட்டார். என்ன இப்படி மாறிட்டாரே என என எனக்கு ஆச்சரியமாக உள்ளதுஎன்று முதல்வர் ஸ்டாலின் குறித்து அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சியாக சட்டப்பேரவையில் பேசினார்.