சென்னையில் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட திமுகவினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், அமைச்சர்கள், அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை பதிவிட்டு, “அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் #CycloneMichaung பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள்!” என பதிவிட்டுள்ளார்.