ஆரணியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பாஜகவுடன் கூட்டணி சேர மிரட்டல் வந்ததாகவும், தேமுதிகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி அச்சுறுத்தியதாகவும் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். முன்னதாக பாஜக உடன் தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.