காங்கிரஸ் செய்திதொடர்பாளர் கௌரவ் வல்லப் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்று, சென்ற 9 ஆண்டு கால ஆட்சியில் அரசாங்கத்தின் கடன் அதிகரித்து சாமானிய மக்களை நசுக்கி இருக்கிறது. மோடி அரசானது நம் வருங்கால சந்ததியினரை கடனில் புதைத்து வருகிறது.

சென்ற 9 வருடங்களில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் ரூபாய்.43,124ல் இருந்து ரூ.1,09,373ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2014ல் இருந்ததைவிட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு கடன் அதிகரித்து இருக்கிறது. அதன்படி, கடந்த 9 வருடத்தில் மட்டும் ஒவ்வொரு இந்தியரின் கடன் ரூபாய்.66,249 ஆக அதிகரித்து உள்ளது.