பாஜகவை துண்டாக வெட்டி கடலில் மூழ்கடித்து விடுவோம் என சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார். பாஜக குறித்து பேசிய அவர், தமிழ் மொழிக்கு, தமிழ் மக்களுக்கு, தமிழ் நாட்டிற்கு எதிரான பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறினார். இதே போல் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டணியில் இருந்து வெளியேறியதால் இபிஎஸ் ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியில் உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.