சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, முதல்வர் பசவராஜ் உள்ளிட்டோர் செய்த சமாதான முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஜெகதீஷ் ஷெட்டரை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.