அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி முறித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, அதிமுகவில் ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் சிலர் இப்படிப்பட்ட அறிவிப்பு வந்தால் பாஜகவிற்கு சென்று விடுவோம் என்று சொல்லி இருப்பதாக தகவல் வருகிறது. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றும் அது நடக்கவில்லை. அண்ணாமலை ஜெயித்து விட்டார். பாஜக ஒத்துக் கொள்ளாத சூழலில் வேறு வழியில்லாமல் இந்த அறிவிப்பு வந்துள்ளது என்று புகழேந்தி தெரிவித்துள்ள.