அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள விமான நிலையத்தில் நேற்று இரவு ஒரு வாயிலில் இருந்து விமானம் நிறுத்தும் பகுதிக்கு விமானம் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் மீது அந்த விமானம் மோதியுள்ளது.

இதில் பஸ்ஸில் பயணித்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.