துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. மேலும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் திரும்பிய இடமெல்லாம் பிணக்குவியலும் மர்ம ஓலங்களும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளும் மட்டுமே காண முடிகின்றது. மலை போல் குவிந்து கிடக்கும் கட்டிட ஈடுபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். இந்த பணியில் இந்தியா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இரு நாடுகளிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனி அரசு நிலநடுக்கம் பாதித்த பகுதிகளான துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள மக்களுக்கு மூன்று மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் உள்துறை மந்திரி நான்சி பீசர் பிரபல பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அழைத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களது உறவினர்களை ஜெர்மனிக்கு அழைத்து வருவதற்காக துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்கு மூன்று மாத கால அவசரகால விசா வழங்க முடிவு செய்துள்ளோம். அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் ஜெர்மனிக்கு வரலாம். மேலும் இதற்கான விசா கெடுபடிகள், அரசு விதிகள் எதுவும் இருக்காது. இது வெறும் அவசரகால உதவி தான்” என்று கூறியுள்ளனர்.