பழம்பெரும் ஒளிப்பதிவாளர் மற்றும் டைரக்டர் பி வாசுவின் சித்தப்பாவான எம்சி சேகர்(91) வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் கடந்த 1986ல் திரையுலகில் அறிமுகமானார். ஆயிரம் கண்ணுடையாள், பன்னீர் புஷ்பங்கள், ரஜினியின் பணக்காரன், உழைப்பாளி, விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல், ரிக் ஷா மாமா, சரத்குமாரின் கூலி உட்பட பெரும்பாலான படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து உள்ளார். எம்சி சேகரின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.