பழனி மலை கோவிலுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் செல்போனில் கருவறையை படம் பிடிக்க முயன்றது சிசிடிவி மூலம் அம்பலமானது. இது தொடர்பான வழக்கில் செல்போன் எடுத்து செல்வதை தடை செய்ய வேண்டும் என நீதிமன்ற முத்தரவிட்ட நிலையில் பழனி மலைக்கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த புதிய உத்தரவு இன்று அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.