பழனியில் கும்பாபிஷேக விழா 16 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி  நடத்தப்பட உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று மாலை வரை 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இன்று கணினி மூலம் குழுக்கள் முறையில் 2000 பக்தர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுவோருக்கு நாளை மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.