பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் சுமார் 16 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 17ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்கள் கட்டணமில்லா ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 18ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை www.palanimurugan.hrce.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். அதில் 2000 பேருக்கு குழுக்கள் முறையில் அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.