தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் வெளியூருக்கு சென்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பள்ளி கோடை விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றவர்கள், சொந்த ஊர் திரும்ப ஏதுவாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.