நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 3 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கிடையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அநதகவையில்  மத்தியில் I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்தால், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி உறுதி அளித்துள்ளார்.

கடலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், “பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும்போது, லேப்டாப் கொடுக்காமல் விடுவோமா. நிச்சயமாக வழங்கப்படும். மோடி ஆட்சி தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. மக்களை இனியும் ஏமாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.