தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் கமிட்டி கட்டணம் நிர்ணயித்த பின்னரே மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என தனியார் பள்ளி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசால் அமைக்கப்பட்ட குழுவின் இந்த ஆண்டுக்கான கட்டண நிர்ணயம் அறிவிக்கப்படும் முன்பே, மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி இயக்குனராக எச்சரிக்கை விடுத்துள்ளது.