உத்தரகாண்ட் மலைப்பிரதேசமான பித்தோராகரில் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இங்கு உள்ள பள்ளத்தில் கார் ஒன்று விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இவ்விபத்து தொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இந்த கோர விபத்தில் 9 பேர் இறந்ததாகவும், 2 பேர் பலத்த காயமடைந்ததாகவும் குமாவோன் ஐஜி நிலேஷ் தெரிவித்தார். மீட்பு குழுவினர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,ஓம் சாந்தி என முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து உள்ளார்