கேரளாவின் திருச்சூர் குண்ணம்குளத்தில் பல் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான். திருச்சூர் முண்டூரைச் சேர்ந்த ஆரோன் (3½) என்ற சிறுவன் கடந்த தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அறுவை சிகிச்சைக்கு பின்னர் இன்று 12.20 மணியளவில் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாரடைப்பு ஏற்பட்டதால் சிறுவன் உயரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதால், பெற்றோர், உறவினர்கள் கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சையால் மகன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். மருத்துவரைக் கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர்  கண்டன ஊர்வலம் நடத்தினர்.