அமெரிக்க நாட்டில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள 2 கட்டிடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியாகியும் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் பல்கலைக்கழகத்தினுள் இருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் காவல்துறையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பல்கலைக்கழகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.