இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் நீண்ட காலமாக எல்லை பிரச்சனையால் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனியர்களை தொடர்ந்து தாக்கும் சம்பவம் நடைபெற்று வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று முன்தினம் இஸ்ரேலின் தெற்கு நகரம் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட் ஒன்றை வீசி உள்ளனர். இந்த ராக்கெட்டை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானிலேயே இடைமறித்து அழித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா நகரில் உள்ள ஹமாஸ் போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் உற்பத்தி தளம் மற்றும் ஆயுத கிடங்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த மோதலால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.