தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தற்போது சினிமாவில் அறிமுகமாகி 10 வருடங்கள் ஆகிறது. ஆனால் 10 வருடங்களில் 4 திரைப்படங்கள் மட்டும் தான் இயக்கியுள்ளார். போடா போடி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தன்னுடைய அடுத்த படத்துக்காக கடுமையாக போராடிய விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற ஹிட் படத்தை கொடுத்தார். அதன்பிறகு சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் வெற்றியை பெறாததால் மீண்டும் அடுத்த படத்திற்காக விக்னேஷ் சிவன் போராடினார். அதன் பிறகு மீண்டும் நடிகர் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுக்க காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அவரின் கதை திருப்திகரமானதாக இல்லாததால் லைக்கா நிறுவனம் மற்றும் அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவனைத் தூக்கிவிட்டு மகிழ்திருமேனியை கமிட் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் விக்கி மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி கிடப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திரையுலக பிரபலங்கள் மற்றும் இயக்குனர் விக்கிக்கு நெருக்கமான பிரபலங்கள் சிலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத் போன்றவர்கள் விக்கிக்கு ஆறுதல் தெரிவித்து வருவதுடன் அவருக்கு பக்கபலமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.