பெரும் பரபரப்பை ரூ.30,000 கோடி தொடர்பாக தான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது என தமிழக நிதியமைச்சர் PTR தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத்தொடர்ந்து PTR ஆடியோ குறித்து மாநில அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என  அண்ணாமலை விமர்சித்தார். PTR பேச்சு, Dmk files தொடர்பான காணொளிக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாக கூறிய அவர், CM மௌனமாக இருப்பது வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றார்.

இந்நிலையில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுத்து அவர்களுக்கு தேவையில்லாத விளம்பரத்தை தேடித்தர விரும்பவில்லை. வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது. என் நேரத்தை வீணடிக்காமல் எனது பணியை தொடர விரும்புகிறேன்’ என்றார்.