உத்தரபிரதேசம் பல்லியாவிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் படி காவல்துறையினர் சென்ற டிசம்பர் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, பல இடங்களில் அவர்களை தேடி வந்தனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவன், சிறுமியை குஜராத்துக்கு அழைத்து சென்று தன் கட்டுப்பாட்டில் வைத்து ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

அதன்பின் சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் படி சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து குழந்தைகள் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.