பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலையில் இருந்தே இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக அதிக அளவிலான லாட்ஜுகள் இருக்கும் சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஒட்டிய பகுதிகளில் உள்ள லாட்ஜ்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் போது அங்கு தங்கு இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்ட அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.