தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வ பெருந்தகை பயப்படுகிறீர்களா மோடி என்று கேட்டு 10 குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

அதில், காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம், எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர் கைது, ராகுல் காந்தி பதவி நீக்கம், தேர்தல் பத்திரம் மூலமாக பல்லாயிரம் கோடி வசூல், அமித்ஷாவிடம் பணியாற்றியவர் தேர்தல் ஆணையராக நியமனம், பல கட்டமாக வாக்குப்பதிவு, ஒப்புகை சீட்டை எண்ண மறுப்பு, திடீர் பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, ஊடகங்களில் 90 சதவீதம் விலைக்கு வாங்கியாகிவிட்டது, சமூக ஊடகங்களில் பாஜகவிற்கு எதிரான எந்த செய்திக்கும் ரீச் இல்லாத படி செய்தாச்சு என்று பட்டியலிட்டுள்ளார்