கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் கர்நாடக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி பேசி கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்தவகையில், கர்நாடக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “தைரியத்துடன் இருங்கள் பிரதமர் மோடி அவர்களே. என் அண்ணனிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.

நம் மீது வீசப்படும் விமர்சனங்களை மறந்து விட வேண்டும் என ராகுல் காந்தி கூறுகிறார். பொது வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம். பயப்படாதீர்கள்” என பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.