ஏழைக் குடும்பங்களை அணுகி சிறுநீரக வியாபாரம் செய்ய ஊக்குவித்த குழு ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர் உட்பட ஆறு  பேரை காவல்துறையினர்  கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தனியார் மருத்துவமனை மருத்துவர் பரமேஸ்வர ராவ் மற்றும் காமராஜு, ஸ்ரீனு, சேகர், எலினா, கொண்டம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஏழை குடும்பங்களை குறிவைத்து கும்பல் செயல்பட்டது தெரியவந்தது. சிறுநீரக வியாபாரத்தில் முக்கியமாக இரண்டு மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.