பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதுவும் தற்போது கோடை விடுமுறை என்பதால் மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் ஒரு சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படும். அந்தவகையில் விருதுநகர் – வாஞ்சி மணியாச்சி இடையே ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கோவை – நாகர்கோவில், தாம்பரம் – நாகர்கோவில், திருச்செந்தூர் பாலக்காடு, திருச்சி – திருவனந்தபுரம், குருவாயூர் சென்னை ஆகிய இருவழித்தட பாதைகளின் ரயில்களின் புறப்படும் சேரும் நேரம், புறப்படும் சேரும் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விவரத்தை சோதித்து பயணத்தை திட்டமிடவும்.