தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், இப்போது கடந்த சில தினங்களாகவே சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தென் இந்தியாவின் வளி மண்டலத்தில் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் சந்திக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.