மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி இன்றும், நாளையும் சென்னை எழும்பூரில் இருந்து பெங்களூருக்கு மாலை 3.50க்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல் பெங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 6.50க்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறை முடிவதால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிகிறது