காங்கோ நாட்டின் கிழக்கு மாகாணமான கிணு பகுதியில் நாசக்கார செயல்களில் பயங்கரவாதிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள வளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனி அரசாங்கமே நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பயங்கரவாதிகள் சிலர் ஒய்சா என்னும் கிராமத்திற்குள் நுழைந்து திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.