இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி போர் மூண்டது. அந்த போரானது இன்று வரை 21 நாட்களாக நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இதுவரை 8,000 த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இஸ்ரேலின் நகரான டெல் அவிவ் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலின் போது சைரன் ஒலித்ததால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று உயிர் தப்பியுள்ளனர்.