ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி7 உச்சு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி மாநாடு முடிந்த பிறகு பப்புவா நியூ கினியாவிற்கு செல்ல இருக்கிறார். மாநாடு முடிந்து அவர் செல்லும் போது இரவு நேரம் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே சூரியன் மறைந்த பிறகு எந்த தலைவருக்கும் சம்பிரதாய வரவேற்பு கொடுக்கக் கூடாது என்பது கட்டுப்பாடாக அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வரவேற்பதற்கான கட்டுப்பாடுகள் பப்புவா நியூ கினியா பிரதமரால் தகர்த்தப்பட்டுள்ளது.