நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு அமைச்சரை பொறுப்பாளராக முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்த நிலையில் எந்த தொகுதியில் வெற்றி பறிப்போகிறதோ அந்த தொகுதி பொறுப்பு அமைச்சரின் பதவியும் பறிபோகும் என்று அவர் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 40 தொகுதிகளையும் திமுக வெல்ல வேண்டும் என்று முதல்வர் ஆவேசமாக பேசியுள்ளார்.