சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு தகுதியுடையவர்கள் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.