சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியதில் வரலாறு காணாத மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கடுமையான சேதம் விளைவித்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அறிக்கையை அளிக்கவும், அதிகாரிகள் அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்குப் பிறகு கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரண நிதி வழங்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வுக்கு பிறகு அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் படி நிவாரணம் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அதே போல பொங்கல் பரிசாக ரொக்க தொகையும் சேர்த்து வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.