சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை நின்ற பிறகும் பல இடங்களில் தண்ணீர் வடியாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு விரைவாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் வழங்கியுள்ளார்.