தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது வெள்ள நிவாரணத் தொகை 6000 பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு பணம் வாங்கியதற்கான அடையாளமாக தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க. ஒருவேளை உங்கள் ரேஷன் கார்டை தவறாக பயன்படுத்தி வேறு ஒரு நபர் பணம் பெற்று இருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.