தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சத்யராஜ் . இவருடைய மகன் திவ்யா சத்யராஜ் .இவர் ஊட்டச்சத்து நிபுணராகவும் இருக்கிறார். பின்தங்கி இருக்கும் குடும்பத்தினருக்கு ஊட்டச்சத்து தொடர்பான சேவைகளை மகிழ்மதி என்ற தொண்டு நிறுவனம் மூலமாக செய்து வருகிறார் . இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகள் தன்னுடைய மருத்துவ லாப நோக்கத்தை  அறிந்த இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில தனியார் மருத்துவமனைகள் அவர்களுடைய லாபத்திற்காக நோயாளிகளுக்கு தேவை இல்லாத பரிசோதனைகளையும் MRI ஸ்கேன்களையும் செய்ய வைக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி நோயாளிகள் குணமடைந்த பிறகும் இரண்டு நாட்கள் அட்மிட் செய்து அதன் பிறகு டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். தனியார் மருத்துவமனைக்கு சென்றால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை விட பணம் செலவாகும் என்ற பயமே அதிகமாக இருக்கிறது. தனியார் மருத்துவமனை வைத்திருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.