தீபாவளி நாளன்று தன்னுடைய சகோதரியுடன் மும்பையின் பிரபலமான தாஜ் ஹோட்டலில் இரவு உணவிற்கு சென்ற ஒரு பெண்ணுக்கு அங்கு ஏற்பட்ட அவமானம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது முன்னாள் காதலரின் சமூக ஊடக கணக்கில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், தாஜ் ஹோட்டலில் மேலாளர் தன்னை “தவறான முறையில் அமர்ந்துள்ளார்” என்று கூறி எச்சரித்ததாக அவர் குற்றம்சாட்டுகிறார்.
அந்தப் பெண் கூறியதாவது: “நான் என் சகோதரியுடன் தீபாவளி இரவு உணவுக்காக தாஜ் ஹோட்டலுக்கு சென்றேன். அப்போது, ஒரு விருந்தினர் எனது உட்காரும் முறை அவருக்கு சிரமமாக இருப்பதாக மேலாளரிடம் புகார் செய்துள்ளார். நான் அப்போது ‘பத்மாசன’ (கால்களை மடக்கி) பாணியில் அமர்ந்திருந்தேன். அதையடுத்து மேலாளர் என்னிடம் வந்து, ‘இது உயர்ந்தவர்களுக்கான சிறந்த உணவகம், நீங்கள் சரியாக உட்கார வேண்டும்’ என்று கூறினார். மேலும், நான் கோலாபுரி செருப்புகளை அணிந்திருந்தபோதும், மூடிய காலணிகள் அணிய வேண்டும் என்றும் கூறினார்,” என அவர் தெரிவித்தார்.
एक आम इंसान, जो मेहनत करके, अपना पैसा कमा कर, अपनी इज़्ज़त के साथ ताज होटल में आता है — उसे आज भी इस देश में ज़लील और अपमानित होना पड़ता है।
और मेरी गलती क्या है? सिर्फ़ ये कि मैं बैठ गई एक “regular padmasana style” में?
क्या ये मेरी गलती है कि ताज मुझे सिखा रहा है कि कैसे बैठना… pic.twitter.com/vKBYjg8ltb— Shradha Sharma (@SharmaShradha) October 21, 2025
அந்தப் பெண் தனது வீடியோவில் மனவருத்தத்துடன், “இந்த கருத்துக்கள் செல்வம், வர்க்கம் மற்றும் கலாச்சாரத்தின் துர்நாற்றம் வீசுகின்றன. நான் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தில் என் வாழ்க்கையை நடத்துகிறேன். என் தவறு என்ன? நான் வழக்கமான பத்மாசனத்தில் அமர்ந்தது மட்டும்தானே? தாஜ் எனக்கு எப்படி உட்கார வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும், “தாஜ் ஹோட்டல் என்னை மிகவும் ஏமாற்றமடையச் செய்தது” என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது X உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பல நெட்டிசன்கள் தாஜ் ஹோட்டல் மேலாண்மையின் நடத்தை குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். ஒருவர், “பிரிட்டிஷ்காரர்கள் போய்விட்டார்கள், ஆனால் அவர்கள் ஆங்கிலேய மரபு இங்கேயே உள்ளது” என்று எழுதியுள்ளார். மற்றொருவர், “விருந்தினருக்கு பிரச்சனை இருந்தால், அவர் தான் ஹோட்டலை விட்டு வெளியேறியிருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.
எனினும், சிலர் “ஒவ்வொரு இடத்திலும் விதிமுறைகள் இருக்கும்; அவற்றை மதிக்க வேண்டும்” என்ற நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தாஜ் ஹோட்டல் நிர்வாகம் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
