சென்னை ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் கிருஷ்ணா ஜூவல்லரி என்ற நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக் கடைக்கு வந்த 4 பேர், துப்பாக்கி முனையில் மிரட்டி உரிமையாளர் பிரகாஷின் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். பின்னர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.