வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோகன். இவர் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் ஆர்த்தோ முதுநிலை படிப்பு படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில் நேற்று வகுப்பு முடிந்தவுடன் வழக்கம் போல் விடுதிக்கு சென்றுள்ளார். இவர் சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் திடீரென அடையாளம் தெரியாத இருவர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் திடீரென ரோகன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த அவர் கூச்சிலிடவே அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து மர்ம நபர்களை பிடித்தனர். இவரை காவல் துறையினர் வசம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்‌. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மிரட்டிய நபர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருடைய பெயர் ரித்திக் குமார் என்பதும் தெரியவந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் அவருடைய நண்பர்  அமித் குமாரின் காதலி அவரை விட்டுவிட்டு ரோகனை காதலித்ததால் ஆத்திரத்தில் அவரை துப்பாக்கிய வைத்து மிரட்டியது தெரியவந்தது. ரயில்வே நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய அமித் குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.