ஹைதராபாத்தை சேர்ந்த சையதா லூலு மின்ஹாஜ் ஜைதி என்பவர் எம்.எஸ். படிப்பதற்காக அமெரிக்காவின் TRENE பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் சமீபத்தில் சிக்காகோ நகரில் மிக மோசமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காணொளி ஒன்று வெளியானது. அந்த காணொளியில் தனது பெயரைக் கூறியவர் தனக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றதாகவும் அங்கு இரத்தம் பரிசோதனைக்கு எடுத்த பிறகு தான் இப்படி மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த காணொளி வைரல் ஆனதை தொடர்ந்து சையதா லூலு மின்ஹாஜ் ஜைதி குடும்பத்தினர் அவரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.