பஞ்சாப், சண்டிகரில் தனித்துப் போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். INDIA கூட்டணியுடன் தேர்தல் கூட்டணி எதுவும் கிடையாது என்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசும் தனித்துப்போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், AAPன் அறிவிப்பு INDIA கூட்டணிக்கு மேலும் பின்னடைவாகி உள்ளது