விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் பி எம் கிசான் திட்டமானது கடந்த 2019 வருடம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணமானது வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்(3 தவணையாக ரூ.2000 வீதம்) வழங்கி வருகிறது.

இந்த பணத்தை பெறுவதற்கு விவசாயிகள் EKYC செயல்முறையை முடிக்க வேண்டும். இதுபற்றி தெரியாத விவசாயிகளுக்காக இம்மாதம் 12 முதல் 21 வரை அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. EKYCஐ அருகில் உள்ள csc மையம் அல்லது PM Kisan இணையதளத்தில் செய்து முடிக்கலாம்.