ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி வனச்சரகம் கும்டாபுரத்தில் பசுவண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐந்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மானாவாரி நிலத்தில் பசுவண்ணா தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். மாலை நேரம் ஒரு மாடு மட்டும் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த பசுவண்ணா அந்த பகுதியில் தேடி பார்த்த போது கடித்து குதறப்பட்ட நிலையில் மாடு இறந்து கிடந்தது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாட்டை பார்வையிட்டு கால் தடயங்களை ஆய்வு செய்தனர். அப்போது மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி கடித்துக் கொன்றது தெரியவந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.