ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி தேராய் பிள்ளை தெருவில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் உள்பட 7 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பவானி பெரிய புலியூர் பகுதியில் வீட்டு மனைகள் பிரித்து சுலப தவணை மூலம் வீட்டு மனைகள் வழங்குவதாக விளம்பரம் செய்தனர். இதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 49 மாதங்கள் செலுத்தினால் வீட்டுமனையை கிரையம் செய்து தருவதாக கூறினர்.

இதற்கு காலிங்கராயன் பாளையத்தை சேர்ந்த மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவர் முகவராக செயல்பட்டார். அவர்கள் கூறியதை நம்பி 49 மாத தவணைத் தொகையை முழுமையாக செலுத்தினோம். அதாவது 3 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி விட்டோம். அவர்கள் வீட்டுமனைகளை கிரையம் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது இரண்டு மாதத்தில் கிரையம் செய்து தருவதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எங்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்