தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி இந்திரா காலனி தெருவில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(32) என்ற மனைவி இருந்துள்ளார். பி.ஏ பட்டதாரியான பாக்கியலட்சுமி டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி வந்தார். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்த பாக்கியலட்சுமி கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாக்கியலட்சுமியை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாக்கியலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.