உத்தரப் பிரதேசத்தில் வங்கி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரை நோக்கி, “நான் ஒரு தாகூர், என்னிடம் மோதாதே” என்று மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரவி வருகிறது. வங்கியில் ஏற்பட்ட ஒரு சாதாரண வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த அந்த ஊழியர் தனது சாதிப் பெயரைக் குறிப்பிட்டு வாடிக்கையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பொது இடத்தில் ஒரு ஊழியர் சக மனிதரை சாதியைக் கூறி மிரட்டுவது முறையற்ற செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“>

மேலும் வங்கி சேவையைப் பெற வந்த ஒருவரிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டது மட்டுமல்லாமல், தனது அதிகாரத்தையும் சாதியையும் காட்டி மிரட்டிய அந்த ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுத்துறை அல்லது தனியார் துறை ஊழியர்கள் இத்தகைய சாதியப் பாகுபாடுடன் நடந்துகொள்வது சமூகத்தில் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.