உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி. இவர் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.‌ இந்நிலையில் எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி உடன் அவருடைய மனைவி நிக்கி பானுவும் சிறையில் ஒன்றாக வசித்து வருவதாக எஸ்பி-க்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி சிறைக்கு சென்று  ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அப்போது எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி அவருடைய மனைவி நிக்கி பானுவுடன் ஒன்றாக சிறையில் இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஹலாலா வழக்கில் கைதான எம்எல்ஏ ஒருவருடன் அவருடைய மனைவியும் ஒன்றாக சிறையில் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.